சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
பெரியாழ்வார் திருமொழி  

Songs from 13.0 to 473.0   ( திருவில்லிபுத்தூர் )
Pages:    Previous   1  2  3  4  5  6  7  8    9  10  Next  Next 10
கன்றுகள் ஓடச் செவியிற்
      கட்டெறும்பு பிடித்து இட்டால்
தென்றிக் கெடும் ஆகில் வெண்ணெய்
      திரட்டி விழுங்குமா காண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்
      நீ பிறந்த திருவோணம்
இன்று நீ நீராட வேண்டும்
      எம்பிரான் ஓடாதே வாராய்



[153.0]
பேய்ச்சி முலை உண்ணக் கண்டு
      பின்னையும் நில்லாது என்நெஞ்சம்
ஆய்ச்சியர் எல்லாரும் கூடி
      அழைக்கவும் நான் முலை தந்தேன்
காய்ச்சின நீரொடு நெல்லி
      கடாரத்திற் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா
      மஞ்சனம் ஆட நீ வாராய்



[154.0]
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
      கடிய சகடம் உதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
      வாய் முலை வைத்த பிரானே
மஞ்சளும் செங்கழுநீரின்
      வாசிகையும் நறுஞ்சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
      அழகனே நீராட வாராய்



[155.0]
Back to Top
அப்பம் கலந்த சிற்றுண்டி
      அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
      தின்னல் உறுதியேல் நம்பி
செப்பு இள மென்முலையார்கள்
      சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
      சோத்தம் பிரான் இங்கே வாராய்



[156.0]
எண்ணெய்க் குடத்தை உருட்டி
      இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
      கழகண்டு செய்யும் பிரானே
உண்ணக் கனிகள் தருவன்
      ஒலிகடல் ஓதநீர் போலே
வண்ணம் அழகிய நம்பீ
      மஞ்சனம் ஆட நீ வாராய்



[157.0]
கறந்த நற்பாலும் தயிரும்
      கடைந்து உறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
      பெற்றறியேன் எம்பிரானே
சிறந்த நற்றாய் அலர் தூற்றும்
      என்பதனால் பிறர் முன்னே
மறந்தும் உரையாட மாட்டேன்
      மஞ்சனம் ஆட நீ வாராய்



[158.0]
கன்றினை வால் ஓலை கட்டி
      கனிகள் உதிர எறிந்து
பின் தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப்
      பிடித்துக்கொண்டு ஆட்டினாய் போலும்
நின்திறத்தேன் அல்லேன் நம்பீ
      நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராட வேண்டும்
      நாரணா ஓடாதே வாராய்



[159.0]
பூணித் தொழுவினிற் புக்குப்
      புழுதி அளைந்த பொன்-மேனி
காணப் பெரிதும் உகப்பன்
      ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாண் இத்தனையும் இலாதாய்
      நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என்மணியே
      மஞ்சனம் ஆட நீ வாராய்



[160.0]
Back to Top
கார் மலி மேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து
வார் மலி கொங்கை யசோதை மஞ்சனம் ஆட்டிய ஆற்றைப்
பார் மலி தொல் புதுவைக் கோன் பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதும் இலரே



[161.0]
பின்னை மணாளனை பேரிற் கிடந்தானை
முன்னை அமரர் முதற் தனி வித்தினை
என்னையும் எங்கள் குடி முழுது ஆட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      மாதவன்தன் குழல்வாராய் அக்காக்காய்



[162.0]
பேயின் முலை உண்ட பிள்ளை இவன் முன்னம்
மாயச் சகடும் மருதும் இறுத்தவன்
காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்து ஆக வந்து குழல்வாராய் அக்காக்காய்
      தூமணி வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்



[163.0]
திண்ணக் கலத்திற் திரை உறிமேல் வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      கார்முகில் வண்ணன் குழல்வாராய் அக்காக்காய்



[164.0]
பள்ளத்தில் மேயும் பறவை உருக் கொண்டு
கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு
புள் இது என்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட
பிள்ளையை வந்து குழல்வாராய் அக்காக்காய்
      பேய் முலை உண்டான் குழல்வாராய் அக்காக்காய்



[165.0]
Back to Top
கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
பற்றி எறிந்த பரமன் திருமுடி
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்து குழல்வாராய் அக்காக்காய்
      ஆழியான்தன் குழல்வாராய் அக்காக்காய்



[166.0]
கிழக்கிற் குடி மன்னர் கேடு இலாதாரை
அழிப்பான் நினைந்திட்டு அவ் ஆழிஅதனால்
விழிக்கும் அளவிலே வேர் அறுத்தானைக்
குழற்கு அணி ஆகக் குழல்வாராய் அக்காக்காய்
      கோவிந்தன்தன் குழல்வாராய் அக்காக்காய்



[167.0]
பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச் சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே
அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல்வாராய் அக்காக்காய்
      மாயவன்தன் குழல்வாராய் அக்காக்காய்



[168.0]
உந்தி எழுந்த உருவ மலர்தன்னில்
சந்தச் சதுமுகன்தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளி அட்டித்
தந்தத்தின் சீப்பால் குழல்வாராய் அக்காக்காய்
      தாமோதரன்தன் குழல்வாராய் அக்காக்காய்



[169.0]
மன்னன்தன் தேவிமார் கண்டு மகிழ்வு எய்த
முன் இவ் உலகினை முற்றும் அளந்தவன்
பொன்னின் முடியினைப் பூ அணைமேல் வைத்துப்
பின்னே இருந்து குழல்வாராய் அக்காக்காய்
      பேர் ஆயிரத்தான் குழல்வாராய் அக்காக்காய்



[170.0]
Back to Top
கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
வண்டு ஆர் குழல்வார வா என்ற ஆய்ச்சி சொல்
விண் தோய் மதில் வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல்
கொண்டாடிப் பாடக் குறுகா வினை தாமே



[171.0]
வேலிக் கோல் வெட்டி விளையாடு வில் ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப் பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா
      கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா



[172.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song